
நல்வரவு
மரபு, பண்பாடு, விழுமியம், வரலாறு, மொழி என்பன ஓர் இனத்தின் அடையாளங்கள் ஆகும். இவையே அவ்வினத்தின் இருப்புக்கான ஆணிவேராக அமைகின்றன. தமிழினம் இவ்வடையாளங்களை மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் சுமந்து வருகின்றது. இவற்றை, புலம்பெயர் நாட்டில் நாம் இழந்து விடக் கூடாது என்பதற்காகவும் இவற்றை எமது அடுத்த தலைமுறை அறிய வேண்டும் என்பதற்காகவும் 1993 ஆம் ஆண்டு கனடாத் தமிழ்க் கல்லூரி உருவாக்கம் பெற்றது. கனடிய அரசில் வருவாய் நோக்கற்ற அமைப்பாக இக்கல்லூரி பதியப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் இக்கல்லூரியில் இணைந்து பல்லாயிரம் மாணவர்கள் தமிழ், தமிழர் சார்ந்த கற்கை நெறிகளைக் கற்று வெளியேறியுள்ளனர். .
தமிழர் எங்கள் பேர்! தமிழே எமக்கு வேர்!
திறன் தேர்வுகள்
ஒவ்வொரு குழந்தையுள்ளும் திறன்கள் நிறைந்தே கிடக்கின்றன. அவற்றைப் புடம் போட்டு வளர்ப்பது எமது கடமையாகும். துறைகள் தோறும் தமிழர் பெருமையுறல் வேண்டும்.
மேலும் வாசிக்க
தமிழ் ஆசிரியர்
கலை ஆழி
‘கலை ஆழி’ என்னும் சிறப்புப் பெயரோடு, கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மக்களால் பயிலப்பட்டும் பேணப்பட்டும் வரும் தமிழிசை, தமிழ் ஆடற்கலை மற்றும் தமிழ் இன்னியங்களைக் கனடாத் தமிழ் மாணவரும் பயில வேண்டும் என்ற நோக்கோடு இப்பிரிவு இயங்குகிறது.
மேலும் வாசிக்க
